பிரயாணிகள் தொழுகை..

398– அல்லாஹ் தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.

புகாரி-350: ஆயிஷா (ரலி)

399– நான் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்று அல்லாஹ் கூறினான்.

புகாரி-1101. இப்னு உமர் (ரலி)


400– நான் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். துல்ஹுலைஃபாவில் (அஸர்) இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன்.

புஹாரி: 1089 அனஸ் (ரலி)

401– ‘நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்’ என்று அனஸ் (ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாட்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘பத்து நாட்கள் தங்கினோம்’ என்று விடையளித்தார்கள்.

புஹாரி: 1081 அனஸ்(ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.