மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்கள் எவை?

கேள்வி எண்: 106. மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்கள் எவை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்?

பதில்: அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது  புறமுதுகிட்டு ஒடுவதும், அப்பாவிகளான இறைநம்பிக்கைக் கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று பதில் கூறினார்கள்.

புகாரி- ஹதீஸ் எண்- 2766: அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.