இதோ உலக அழிவு உங்கள் கண் முன்னே!

1. சூரியன் சுருண்டு விடும் போது…
2. நட்சத்திரங்கள் ஒளி மங்கி விடும் போது…
3. மலைகள் பெயர்க்கப்பட்டு தூள் தூளாக சென்று விடும் போது…
4. பத்து மாத நிறை கர்ப்ப ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும் போது…
5. வன விலங்குகள் ஒன்று திரண்டு விடும் போது…
6. கடல்கள் எரித்து விடப்படும் போது…
7. ஆன்மாக்கள் ஒன்றிணைக்கப்படும் போது…
8,9. உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைகள் நீ எப்பாவத்திற்காகக் கொலை செய்யப்பட்டாய் என விசாரிக்கப்படும் போது…
10. செயல் பதிவேடுகள் விரிக்கப்படும் போது…
11. வானத்திரை அகற்றப்படும் போது…
12. நரகம் எரிக்கப்படும் போது…
13. சுவர்க்கம் அருகாமையில் கொண்டு வரப்படும் போது…
14. அப்போது ஒவ்வொரு மனிதனும் தான் என்ன கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்துக் கொள்வான்.

அல்குர்ஆன்: ஸூரா அத்தக்வீர்

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.