“எழுதப்படிக்கத் தெரியாத நபி” என்று முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து இறைவன் கூறும் வசனம் எது?

கேள்வி எண்: 89. “எழுதப்படிக்கத் தெரியாத நபி” என்று முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து இறைவன் கூறும் வசனம் எது?

பதில்: “எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராதிலும், இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்களை செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார். அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கி விடுவார். எனவே, எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்” (அல்குர்ஆன்: 7:157)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.