யூனூஸ் நபியவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது செய்த பிரார்த்தனையைக் கூறுக!

கேள்வி எண்: 88. யூனூஸ் நபி (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும்போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக் கூறுக.

பதில்: “இன்னும் (நினைவு கூர்வீராக) துன்னூன் (யூனூஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறியபோது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்டபடியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார். எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று பிரார்த்தித்தார்” (அல்குர்ஆன்: 21:87)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.