பெண்களுக்குக் கனவில் ஸ்கலிதம் ஆனால்…

180- உம்முஸூலைம் (ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு (ஆம்! அவள் உறங்கி விழித்ததும் தன் ஆடையில் இந்திரியத்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக்கேட்டுக் கொண்டிருந்த உம்முஸலமா (ரலி) அவர்கள் தமது முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நன்றாகக் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளது குழந்தை (சில சமயங்களில்) எதனால் அவளைப் போன்றிருக்கிறது? என்று கேட்டார்கள்.

புகாரி-130: உம்மு ஸலமா (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.