நிலைத்தவனாகிய நித்திய ஜீவன்!

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்

பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என்

இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல்

பரப்பி) விடுவான்” என்று நீர் கூறுவீராக.



20:106. “பின்பு, அவற்றை சமவெளியாக்கி விடுவான்.



20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்”.

20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் – எக்காளம்

மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்;

அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும்

(அவ்வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச்

சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக

அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர

(வேறெதையும்) நீர் கேட்க மாட்டீர்.

20:109. அந்நாளில் அர்ரஹ்மான் (அருளாளன்)

எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்துக்

கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய

ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.

20:110. அவர்களுக்கு முன்னிருப்பதையும்,

அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன்

நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்)

கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.

20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான

(அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து

தாழ்ந்து விடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச்

சுமந்துக் கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி

விடுவான்.

20:112. எவர் முஃமினாக (நம்பிக்கை கொண்டவராக)

இருந்து, ஸாலிஹான – நற்செயல்களைச் செய்கிறாரோ

அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ,

(தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட

மாட்டார்.

20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை

அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள்

பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது

நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும்

பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை

விவரித்திருக்கின்றோம்.

20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே

மிக் உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு

(குர்ஆனின்) வஹீ – செய்தி அறிவிக்கப்பட்டு அது

முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர்

அவசரப் படாதீர்; ‘இறைவா! கல்வி ஞானத்தை

எனக்கு அதிகப்படுத்துவாயாக!’ என்றும் நீர்

பிரார்த்தனை செய்வீராக!.

அல் குர்ஆன்: சூரா தாஹா.

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.