Monthly Archives: August 2008
நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.
1526. நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி). 1527. ‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே … Continue reading
ஈமான் கொண்டவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்?
கேள்வி எண்: 96. ஈமான் கொண்டவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்?
முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்.
1521. ‘தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :7289 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி). 1522. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை … Continue reading
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியம்.
1519. மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக … Continue reading
அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.
1518. நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட … Continue reading
மரணம் குறித்து முஸ்லிம்களின் கண்ணோட்டம் என்ன?
மரணத்துக்குப் பின் வரவுள்ள நிரந்தர மறுமை உலகத்துக்காகத் தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ளச் செய்வதற்கான செயற்களமே இந்த உலகம் என்று யூதர்கள், கிறிஸ்தவர்களைப் போன்றே முஸ்லிம்களும் நம்புகின்றனர். இறுதித் தீர்ப்பு நாள், மீண்டும் உயிர்தெழுதல், சுவனம்-நரகம் ஆகியன இறைநம்பிக்கையின் அடிப்படை விஷயங்களில் அடங்கும். ஒரு முஸ்லிம் – அவர் ஆணாக இருப்பினும் சரி, பெண்ணாக இருப்பினும் … Continue reading
நபி (ஸல்) அவர்களின் பிற பெயர்கள்.
1517. எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன். நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ (குஃப்ரை) அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஞர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் … Continue reading
மக்கா மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்?
1516. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப்பட்டார்கள். தமக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் மக்காவில் பதின்மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட, ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள். புஹாரி : 3902 இப்னு அப்பாஸ் (ரலி).
மரணத்தின் போது நபிகளாரின் வயது.
1515. நபி (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள். புஹாரி : 3536 ஆயிஷா (ரலி).
நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய வசனம் எது?
கேள்வி எண்: 95. நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய வசனம் எது?