Monthly Archives: March 2005
மூல நூலாசிரியரின் வரலாறு – ஆசிரியர் முகவுரை!
இந்நூலின் மூல ஆசிரியரான ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா … Continue reading
அவரவர் தவணைகளை நோக்கி!
35:38. நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். 35:39. அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி … Continue reading
பாடம் – 15
ஷிர்க்கை நோக்கி இட்டுச்செல்லும் எல்லா வழிகளையும் முஸ்தபா (ஸல்) தடுத்தார்கள். ‘(விசுவாசிகளே!) உங்களிடமிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்; (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும்; உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர்; விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர்; மிகக் கிருபையுடையவர். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மை … Continue reading
சிபாரிசு பலனளிக்கும் நாள்!
2:48. “நீங்கள் மறுமை நாளை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்! அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்குப் பலனளிக்காது. எந்தவொரு ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்காகப் பரிந்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாக) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்”. 2:123. “எந்த நாளில் … Continue reading
பாடம் – 14
ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் செய்யும் செயல் எல்லை மீறும் போது அது மரித்தவரை விக்கிரகத்திற்கு சமமாக்கும். ‘யா அல்லாஹ்! என்னுடைய அடக்கத்தலத்தை காஃபிர்களின் விக்கிரகத்தைப் போன்று செய்து விடாதே. தங்கள் நபிமார்களின் அடக்கத்தலத்தை மஸ்ஜிதுகளாக மாற்றியமைத்த மக்கள் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானது.’ என நபி முஹம்மத் (ஸல்) கூறியதாக இமாம் மாலிக் தன் … Continue reading
பாடம் – 13
மரித்த ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் அல்லாஹ்வை வணங்குவது தடையாகும். அச்செயல் மரித்தவனை வணங்கும் செயலாகும். உம் சலாமா (ரலி) ஒருமுறை அபிசீனியாவில் கிறிஸ்தவக்கோவிலில் சிலைகளும், சித்திரங்களும் நிறைந்து இருப்பதைத்தான் கண்டதாக நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ‘அவர்களில் ஒரு நல்ல மனிதர் அல்லது இறைபக்தர் இறந்தால் அவரை அடக்கிய ஸ்தலத்தின் … Continue reading
மூதாதையர்கள்?
2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?5:104. “அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என … Continue reading
பாடம் – 12
அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும். “இன்னும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக) நீர் ஆகிவிடுவீர். அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர … Continue reading
இறை சோதனை!
7:163. (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப் பற்றி நீர் அவர்களைக் கேளும் – அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு (த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன – ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) … Continue reading
பாடம் – 11
அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும். “இன்னும் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர் ஜின்களில் உள்ள ஆண்கள் பலரிடம் (தங்களை) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர் இதனால் அவர்கள் (ஜின்கள்) அவர்களை (மனிதர்களை) பாபத்திலும் இறையச்சமற்ற தன்மையில் கர்வத்தையும் அதிகமாக்கி விட்டார்கள்.” என அல்லாஹ் கூறுகிறான். (72:6) “ஒரு தங்குமிடத்தில் நுழையும் போது ‘அல்லாஹ்வின் … Continue reading