Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
நபி(ஸல்)அவர்களின் பரிந்துரை அபூதாலிப் மீது…
125- நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் உங்கள் பெரிய தந்தை (அபூதாலிபு)க்கு (அவர் செய்த உதவிகளுக்குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரிகளின் தாக்குதலிலிருந்து) பாதுகாப்பவராகவும், உங்களுக்காக (உங்கள் எதிரிகளிடம்) கோபப்படுபவராகவும் இருந்தாரே என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவர் இப்போது (கணுக்கால் வரை … Continue reading
அழியட்டும் அபூலஹபின் இருகரங்கள்……
124- (நபியே) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அதாவது) தூய மனம் படைத்த உம்முடைய குழவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!) எனும் (26:214 ஆவது) இறைவசம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ஸஃபா (மலை) மீதேறி உரத்த குரலில், யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூறினார்கள். … Continue reading
ஓரிறைக் கொள்கையும் நற்செயல்களும்…..
123- உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள் என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, குறைஷிக் குலத்தாரே! என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து) ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரகநெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் … Continue reading
நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை!
122- ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர். அல்லது ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப்) பிரார்த்தனை உண்டு. அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டு விட்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன் என … Continue reading
அல்லாஹ் நாடினால்……..
121- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தவருக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்தி வைக்க நான் விரும்புகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7474: அபூஹூரைரா(ரலி)
இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!
120- ஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ தà¯à®¤à®°à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ (à®à®°à¯ விரà¯à®¨à¯à®¤à®¿à®²à¯) à®à®±à¯à®à¯à®à®¿ à®à¯à®£à¯à®à¯ வரபà¯à®ªà®à¯à®à®¤à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ (à®à®®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®) பà¯à®à®®à¯ (à®®à¯à®©à¯à®à®¾à®²à¯ à®à®ªà¯à®ªà¯) à®à®©à¯à®±à¯ ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ நà¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. ஠த௠஠வரà¯à®à®³à¯à®à¯à®à¯ மிà®à®µà¯à®®à¯ பிà®à®¿à®¤à¯à®¤à®®à®¾à®©à®¤à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à¯ வநà¯à®¤à®¤à¯. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ (஠தà¯) வாயாலà¯à®¯à¯ (பறà¯à®à®³à®¾à®²à¯) பறà¯à®±à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯ ஠திலிரà¯à®¨à¯à®¤à¯ à®à®¿à®±à®¿à®¤à¯ à®à®£à¯à®à®¾à®°à¯à®à®³à¯. பிறà®à¯ நான௠மறà¯à®®à¯ நாளில௠… Continue reading
லாஇலாஹ இல்லல்லாஹ்!
119- அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று (இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைச் செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் … Continue reading
நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர…
118- அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் (அதிபயங்கரமான)இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாராவது) நாம் கேட்டுக் கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான)ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன் (தன்னால் படைக்கப்பட்ட) உயிரை … Continue reading
குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி
117- நபி (ஸல்) அவர்கள் (சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின் வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் … Continue reading
நரகவாசிகளின் மீது அல்லாஹ்வின் கருணை
116- (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள். -இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார்- … Continue reading