Author Archives: Jafar

கடவுளை தேடுவோரே கவனியுங்கள்

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது: தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. அல் குர்ஆன்: அத்தியாயம்-22 … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on கடவுளை தேடுவோரே கவனியுங்கள்

மேன்மையான மனிதா?

(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிபட்டவன் என்றால் அவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடிச்(சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டு கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான். இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால் அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவை யாவும் மறைந்து விடும். … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மேன்மையான மனிதா?

அவனுடைய (அல்லாஹ்வின்) அருட்கொடைகள்.

அவன் (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன். அவன் மனிதனை இந்திரியத் துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ளஆடைய ணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அவனுடைய (அல்லாஹ்வின்) அருட்கொடைகள்.

அறிவுடையோரே! பதில் தாருங்கள்.

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அறிவுடையோரே! பதில் தாருங்கள்.

நிராகரிப்போரின் இறுதி நிலை.

சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உறுதியாகவும்பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்று கொண்டோம்)” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நிராகரிப்போரின் இறுதி நிலை.

இவனல்லவா இறைவன்.

“பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்து பாருங்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக. வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம் என்று (நபியே) நீர் (அ வர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூற முடியும்? எனவே) “எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று கூறுவீராக; அவன் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இவனல்லவா இறைவன்.

உண்மை முஸ்லிமின் செயல்கள்.

வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கிஅவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும்; உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன். இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன் தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான். இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவ்ர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதாட)ட … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உண்மை முஸ்லிமின் செயல்கள்.

அவனே (அல்லாஹ்) வணக்க வழிபாட்டுக்கு உரியவன்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களூக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்;தூய்மையும்) உடையோராகலாம். அல்குர்ஆன்: 2-21

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அவனே (அல்லாஹ்) வணக்க வழிபாட்டுக்கு உரியவன்.

நன்றி மறத்தல் நன்மையோ

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்திலிருந்து மழை பொழியச் செய்து; அதிலிருந்து உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை (மற்ற கடவுள்கள்) ஏற்படுத்தாதீர்கள். அல்குர்ஆன்: 2-22

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நன்றி மறத்தல் நன்மையோ

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிற்ரஹீம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிற்ரஹீம்