Tag Archives: ஜிஸ்யா
அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (2)
சுட்டெரிக்கும் பாலைப் பெருவெளியில் இருண்டு கிடந்த அரேபியாவிலிருந்து கிளர்ந்தெழுந்து ரோம், பாரசீகம், இன்னும் ஐரோப்பா போன்ற பெருநில வெளிகளிலெல்லாம் அறிவுக்கதிர் சிந்திய அரேபியர்களைப் போர்வெறியர்கள் என வர்ணிக்கின்ற ‘மேதை’களும் வாழத்தான் செய்கின்றார்கள். இந்த ‘மேதை’களில் சிலர் இஸ்லாத்திற்கு எதிராக தங்களது பேனா முனைகளை ஓட்டியபோது, ’இஸ்லாம் தந்த உற்சாகத்தால் முஸ்லிம்கள் தங்களால் முடிந்தவரை வாளால் மதம் … Continue reading
அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)
9. திருக்குர்ஆனே இஸ்லாமிய நாட்டின் அமைப்பு நிர்ணயச்சட்டம். எனினும் முஸ்லிம்கள் தங்களுடைய பொதுவான விவகாரங்களில் ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்தே செயல்பட்டிட வேண்டும். இது சட்டம் இயற்றும் சபைகளும், ஆலோசனை அவைகளும் ஏற்பட வழிவகுக்கின்றது. இந்த சபைகளும் அவைகளும் வட்டார, தேசிய, சர்வதேசிய அளவில் அமைந்திடலாம். இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் பொதுப்பிரச்சினைகளில் தங்களது … Continue reading
81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6412 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. பாகம் 7, அத்தியாயம் 81, … Continue reading
58.’ஜிஸ்யா’ காப்புவரி ஒப்பந்தம்
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3156 அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களுடனும் அம்ர் இப்னு அவ்ஸ்(ரஹ்) அவர்களுடனும் அமர்ந்திருந்தேன். அப்போது (அவர்கள் கூறினார்கள்:) முஸ்அப் இப்னு ஸுபைர்(ரஹ்) பஸராவாசிகளுடன் ஹஜ் செய்த ஆண்டான ஹிஜ்ரீ 70-ம் ஆண்டில் அவ்விருவரிடமும் ஸம் ஸம் கிணற்றின் படிக்கட்டின் அருகே பஜாலா(ரஹ்) … Continue reading
46.அநீதிகளும் அபகரித்தலும்
பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2440 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் … Continue reading
24.ஸகாத்தின் சட்டங்கள்
பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1395 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! … Continue reading