Tag Archives: உணவு
தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.
1330. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.”.. அல்லது ‘இவருக்கு விருந்தளிப்பவர் … Continue reading
கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.
1328. சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 4478 ஸயீத் இப்னு ஸைத் (ரலி).
மதீனத்துப் பேரீத்தங்கனிகளின் சிறப்பு.
1327. தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5768 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).
தடுக்கப்பட்ட உண்ணும் முறை.
1326. நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர் (ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர் (ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் … Continue reading
வெள்ளரிக்காயுடன் பேரீச்சச் செங்காய்களை உண்ணுதல்.
1325. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை கண்டேன். புஹாரி :5440 அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரலி).
மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.
1322. (பà¯à®°à¯à®à¯à®à®¾à®) à® à®à®´à¯ தà¯à®£à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà¯à®¤à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®©à¯ வயிற௠(பà®à®¿à®¯à®¿à®©à®¾à®²à¯) மிà®à®µà¯à®®à¯ à®à®à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®à¯ à®à®£à¯à®à¯à®©à¯. à®à®à®©à¯ நான௠திரà¯à®®à¯à®ªà®¿ à®à®©à¯ மனà¯à®µà®¿à®¯à®¿à®à®®à¯ வநà¯à®¤à¯, ‘நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®©à¯ வயிற௠மிà®à®µà¯à®®à¯ à®à®à¯à®à®¿à®ªà¯ பà¯à®¯à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®à¯ à®à®£à¯à®à¯à®©à¯. à®à®©à¯à®©à®¿à®à®®à¯ à®à®¤à¯à®©à¯à®®à¯ (à®à®£à¯à®£) à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à®¾?’ à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à¯à®©à¯. à®à®à®©à¯ à®à®©à¯à®©à®¿à®à®®à¯ à®à®©à¯ மனà¯à®µà®¿ à®à®°à¯ பà¯à®¯à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ … Continue reading
விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..
1321. அபூ ஷுஐப் என்ற அன்ஸாரி, (பிராணியை) அறுத்துத் துண்டு போடும் தம் ஊழியரிடம், ‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப் போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டு. ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் வேறு ஒரு மனிதரும் சேர்ந்து … Continue reading
உணவு உண்டு முடித்ததும் சாப்பிட்ட விரல்களைச் சூப்புதல்.
1320. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5456 இப்னு அப்பாஸ் (ரலி).
உண்ணும் பருகும் முறையில் பேணுதல்.
1313. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!” என்று கூறினார்கள். அதன் பிறகு … Continue reading
வெட்டுக்கிளியை உண்ணலாம்.
1275. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ புனிதப் போர்களில் கலந்து கொண்டோம். நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டு வந்தோம். புஹாரி : 5495 சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)