அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (2)

செயல்படச் செய்யும் திருமறை.

திருக்குர்ஆன் தரும் அறிவின் பிரிதொரு தனித்தன்மை செயல்பட வேண்டும் என்ற உணர்வையும், உந்துதலையும் தருவதாகும். அது செயல்படத் தூண்டும் ஆக்கப்பூர்வமான அறிவாகும். அது மனதில் செயல்பட வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவது.

திருமறை வசனங்களின் அமைப்பும், அவற்றின் போதனைகளும் எப்படி மனிதர்களை செயல்படும் பேரியக்கங்களாக மாற்றியது என்பதற்கு வரலாறு சான்று பகருகின்றது. அதுபோலவே திருமறையும் பல அத்தாட்சிகளைத் தருகின்றது.

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இறைச்செய்தியின்பால் மக்களை அழைத்திடும்போது அவர்களுக்கு இருந்த ஒரே சக்தி திருக்குர்ஆனே ஆகும். அவர்கள் பெற்றிருந்த அறிவெல்லாம் திருமறை தந்த கருத்துக் கருவூலங்களே!
திருக்குர்ஆன் தரும் செயல்திறன் அளப்பரியது. தடுத்து நிறுத்த முடியாதது. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (2)

அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)

திருக்குர்ஆன் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பெற்ற மிகப்பெரிய பரிசாகும். அது தரும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது.

சுருக்கமாகச் சொன்னால் திருமறையின் நோக்கம், அதற்கு முன்னால் வந்த இறைவெளிப்பாடுகளைக் காத்து, இறைவனின் வழிகாட்டுதலை மனிதனுக்கு அறிவித்து, மனிதனை நேர்வழியின்பால் இட்டுச் செல்வதேயாகும். அத்துடன் மனிதனின் ஆன்மாவை ஈடேற்றத்தின்பால் கொண்டு செல்கின்றது. மனிதனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, மனிதனின் மனதை இருட்டிலிருந்து மீட்டி, வெளிச்சத்திற்கு கொண்டு செல்கின்றது.

திருக்குர்ஆன் இறைவனின் அருள் வாக்காகும். அது இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வானவர்கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாகும். அது போன்றதொன்றை ஆக்கிடுவதென்பது மனிதனின் கற்பனைக்குக்கூட எட்டாத ஒன்றாகும். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)

அத்தியாயம்-9. இஸ்லாத்தில் பெண்களின் நிலை. (STATUS OF WOMEN IN ISLAM)

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பிரச்சினைக்குரிய ஒரு விவாதமே அல்ல. ஆனால் வேதனைக்குரிய நிலையில் அது ஒரு விவாதப்பொருளாக மாற்றப்பட்டு விட்டது. இதற்குக் காரணம், சில மேலைநாட்டவர்கள் வேண்டுமென்றே தூவிய விஷ வித்துக்களேயாகும்.

இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதற்கு திருக்குர்ஆன் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. அத்துடன் ஆரம்பகால முஸ்லிம்கள் பெண்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பது ஒரு வரலாற்றுச் சான்றாகும்.

ஆண்கள் எவ்வாறு சமுதாய வாழ்க்கைக்கு முக்கியமானவர்களோ அவ்வாறே பெண்களும் சமுதாய வாழ்க்கைக்கு முக்கியமானவர்கள். பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்களல்ல. அதுபோலவே பெண்கள் இழிந்த பிறப்பினங்களுமல்ல. முஸ்லிம்கள் இதில் மிகுந்த தெளிவுடன் தான் இருந்தார்கள். மேலைநாட்டு நாகரீகம் என்ற மோகம் தாக்காதிருந்தால் அவர்கள் இன்றும் தெளிவுடன் தான் இருந்திருப்பார்கள். அந்நிய கலாச்சாரங்களும், கவர்ச்சிகளும் ஏற்படுத்திய பாதிப்புகளினால் முஸ்லிம்களில் சிலரும், மேலைநாட்டவர்களும் இதை தெளிவு பெறவேண்டிய ஒரு பிரச்சினை என்றாக்கி விட்டார்கள். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-9. இஸ்லாத்தில் பெண்களின் நிலை. (STATUS OF WOMEN IN ISLAM)

அத்தியாயம்-8. திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

இஸ்லாம் தரும் கொள்கைகளுள் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை அல்லது மிகவும் திரித்துக் கூறப்பட்டு வருபவை திருமணத்தைப் பற்றி இஸ்லாம் தரும் கொள்கைகளாகும். திருமணங்கள் குறித்து இஸ்லாம் தரும் விளக்கங்களை வெவ்வேறு தரப்பினரும் தங்களது விருப்பம்போல் விமர்சித்து வருகின்றார்கள். அவர்களுக்கு இஸ்லாம் எந்த நோக்கத்தோடு அணுகுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவது நிறைந்த பலனைத் தரலாம். ஆகவே இதுகுறித்து நாம் ஏற்கனவே தந்த விளக்கங்களுடன் இன்னும் சில விளக்கங்களை இங்கே தருகின்றோம்.

இஸ்லாத்தில் திருமணங்கள் என்பவை இலாபத்தை நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் ஒப்பந்தங்கள் அல்ல. யார் யார் எவ்வளவு பொருள்களை (’சீர்’ வரிசைகளை) தர வேண்டும், அதற்காக அடுத்தவர்கள் என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் பட்டியல் போட்டுக்காட்டும் உலகாதாய ஒப்பந்தங்களும் அல்ல. நாம் பின்பற்றி வாழும் மதத்திற்கும் திருமண ஒப்பந்தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதும் இஸ்லாத்தின் கருத்தல்ல.

திருமணங்கள் புனிதமானவை. அதை உலகியல் இலாபங்களின் அடிப்படையிலிருந்து விமர்சித்திடுவது முறையாகாது. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-8. திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-4

 1. முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உலகத்து மக்களுக்காக ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வந்தார்கள். அதுபோலவே வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் மேற்கொண்ட திருமண வாழ்க்கையும் மிகவும் அழகிய முறையில் குடும்ப வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதாகும். அவர்கள் அன்பு நிறைந்த ஒரு கணவராக இருந்தார்கள். மனையறத்தின் கடமைகளை மாண்புற நிறைவேற்றினார்கள். மன்னிக்கும் மாண்பைக்கொண்டு மாதர்களுக்கு மனநிறைவைத் தந்தார்கள். தம் மனைவியோடு ஒப்பற்ற வாழ்க்கைத் துணையாக துணை நின்றார்கள். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் என்னென்ன அனுபவங்களைப் பெறுவானோ அத்தனை அனுபவங்களையும் பெற்றார்கள். அத்தனை அனுபவங்களிலும் ஒரு அழகிய முன்மாதிரியை அமைத்துத் தந்தார்கள். அவர்கள் ஒரு மனைவியோடு வாழ்ந்தார்கள். அதில் ஒரு அழகிய முன்மாதிரியை அவர்களிடம் காணலாம். அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு வாழ்ந்தார்கள். அதிலும் அவர்களிடம் சிறந்ததொரு எடுத்துக்காட்டைக் காணலாம். தன்னைவிட வயதில் முதிர்ந்த மனைவியோடு வாழ்ந்திருக்கின்றார்கள். வயதில் குறைந்த மனைவியோடும் வாழ்ந்திருக்கின்றார்கள். விதவையாக்கப்பட்ட பெண்களை மறுமணம் செய்து நறுமணம் பரப்பி இருக்கின்றார்கள். மணவிலக்கு செய்து விடப்பட்ட பெண்களை மணந்து கொண்டு மறுவாழ்வு கொடுத்திருக்கின்றார்கள். கோபம் நிறைந்த துணைவியரோடு வாழ்ந்திருக்கின்றார்கள். குணத்தில் நிறைந்த மனைவியரோடு வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தனை சூழ்நிலைகளிலேயும் அவர்கள் கருணை மிக்கவர்களாக, பார்வையிலே பரிகாரம் கிடைத்திடும் என்ற அளவில் ஆறுதல் தரும் அமைதி வாழ்க்கையையே நடத்தியுள்ளார்கள். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-4

அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-3

4. ஆண்கள் இயல்பாகவே சில பணிகளை ஆற்றிட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரம், உத்தியோகம் போன்ற பல காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியதிருக்கின்றது. அவர்கள் வீட்டுக்கு வெளியே தங்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். சில சூழ்நிலைகளில் அவர்கள் அண்டை நாடுகளில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் தங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது. இதுபோன்ற எல்லாச் சூழ்நிலைகளிலேயும் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்திட முடியாது. பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக வீட்டுக்கு வெளியே தங்குபவர்கள் சில நேரங்களில் புதிய பெண்களிடம் தவறி விழுந்திடுவதுண்டு. சில மனிதர்கள் இயல்பாகவே இதில் பலவீனமானவர்களாக இருக்கலாம். அவர்களால் சாதாரண உந்தல்களைக்கூட கட்டுப்படுத்திட முடியாமல் போகலாம். அவர்கள் உணர்வுகளின் உந்தல்களால் பாவத்தில் விழுந்து விடலாம். இங்கேயும் ஏற்கனவே விவரித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பலதாரமணம் அனுமதிக்கப்படலாம்.

இதுபோன்று வேற்று நாடுகளில் வருடக்கணக்காகத் தங்கிடும் ஆண்கள் சட்டப்படி இன்னொரு மனைவியையும் மணந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்கள் பாவங்கள் இழைப்பதிலிருந்தும், தனது உணர்வுகளால் அழைக்களிக்கப்படுவதிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அந்த (முதல்) மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் இது நன்மைப் பயப்பதாகும். தனது கணவன் கண்டவர்களையெல்லாம் கொள்கிறான் என்பதைவிட சட்டப்படியான இன்னொரு மனைவியோடு நீதி நெறிமுறைகளுக்கு உட்பட்டே ஒழுகி வாழ்கிறான் என்பது அவர்களது எரிச்சலையும், ஏக்கத்தையும் தணிப்பதாகவே அமையும். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-3

அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-2

திருமணமான எல்லா ஆண்களும் முழுமையான திருப்தியைப் பெற்றவர்களாகவும், முழுமையான நிம்மதியைப் பெற்றவர்களாகவும் இருப்பதில்லை என்பதை நாம் அறிவோம். சில பல காரணங்களால் அவர்கள் குடும்ப வாழ்வின் சுகத்தை இழந்திருக்கின்றார்கள். இதற்கெனக் காரணங்களைக் கண்டறியுமுன், இந்த உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். இப்படி நிம்மதியிழந்து தவித்திடும் ஆண்கள் இந்த நிம்மதியை வெளியே தேடிட முயற்சிக்கின்றனர். பெண்கள் எண்ணிக்கையில் மிகைத்து நிற்கும் ஒரு சமுதாய அமைப்பில் இந்த நிம்மதி தேடும் வேலை மிக எளிதாக நிறைவேறி விடுகின்றது. சட்டப்படி இதனைப் பெற்றிட முடியவில்லை என்றால் இதனை வேறு உபாயங்களில் வழிதேட முயற்சிக்கின்றான். இதன் விளைவாக தகாத உறவுகள், கற்பழிப்புகள், இன்னும் இவைபோன்ற முடிவற்ற துயரங்கள் பல சமுதாயத்தில் தலையெடுக்கின்றன.

இந்த உண்மைகளைக் காகிதத்தில் வடிப்பது கசப்பாக தெரியலாம். ஆனால் இவை சமுதாயத்தில் தலைவிரித்துத் தாண்டவமாடும் கசப்பான உண்மைகளில்லையா? இந்தப் பிரச்சினைகளை எல்லோருக்கும் இதமளிக்கும் விதத்தில் தீர்த்திட வேண்டாமா? சமுதாயம் இதுபோன்ற முறைகேடுகளுக்கு ஆட்பட்டு உடைந்துவிடாமல் பாதுகாத்திட வேண்டாமா? Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-2

அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-1

ஒன்றுக்கு மேற்பட்ட துணைவியர். (PLURALITY OF WIFES)

பலதார மணம் என்பதற்கு ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுக்குக் கணவனாக இருத்தல் என்று பொருள். இங்கே நாம் பலதார மணம் எனக் குறிப்பிடுவது ஒரு ஆண் பல பெண்களை மணந்திருத்தலைத்தான்.

ஒரே பெண்ணை பல ஆண்கள் மணந்து கொள்ளும் வழக்கமும் மனித வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலே இருந்து தான் இருக்கிறது.

பல பெண்களும், பல ஆண்களும் கூட்டு முறையில் திருமண உறவுகள் வைத்துக் கொள்ளும் வழக்கமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இருந்து வந்திருக்கின்றது. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-1

அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-2) (JESUS SON OF MARY)

இரத்தத் தியாகம் செய்து எல்லாப் பாவங்களிலிருந்தும் மொத்தமாக விடுதலை வாங்கித் தருவதல்ல நபி ஈஸா (அலை) அவர்களின் பணி. நபி ஈஸா (அலை) அவர்கள் இதற்காக அனுப்பப்பட்டவர்களும் அல்ல.

மக்களுக்கு இறைவனின் நேர்வழியைக் காட்டி, நல்லொழுக்கத்தைக் கற்பித்து, மரத்துப்போன அம்மக்களின் மனதைப் பண்படுத்தி, அவர்களின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பாவங்களைத் துடைத்திடவே நபி ஈஸா (அலை) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். மக்களால் மறக்கப்பட்டுவிட்ட இறை வெளிப்பாடுகளையும், இறை வழிக்காட்டுதல்களையும் நினைவுறுத்தி இறைவனின் மார்க்கத்தை நிலைநாட்டவே அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டார்கள். இந்தப் பணியை நிறைவேற்றுவதில் அவர்கள் இறைவனின் போதனைகளை மக்களிடையே பரப்பி வந்தார்கள். அத்துடன் தனது புனிதப் பணிக்கு வலுவூட்டுகின்ற விதத்தில் சில அற்புதங்களையும் செய்து காட்டினார்கள். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-2) (JESUS SON OF MARY)

அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-1) (JESUS SON OF MARY)

மனித வரலாற்றில் எண்ணற்ற வாதப் பிரதிவாதங்களால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சினை நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு பற்றியதாகும். அவர்கள் முழுக்க முழுக்கத் தெய்வீகமானவர்களா? அல்லது மனிதர்களில் ஒருவர்தானா? அல்லது அவர்கள் பாதி மனிதராகவும் பாதித் தெய்வீகமாகவும் இருந்தார்களா? அவர்கள் உண்மையானவர்களா அல்லது ஏமாற்றித் திரிந்தவர்களுல் ஒருவரானவர்களா? அவர்கள் எல்லாக் குழந்தைகளையும் போலவே தாய், தந்தை ஆகியோருக்குப் பிறந்தவர்களா? அவர்கள் குளிர்காலத்தில் பிறந்தார்களா? கோடைகாலத்தில் பிறந்தார்களா?

இவையும், இவைபோன்ற இன்னும் பல கேள்விகளையும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும் கேட்டு வருகின்றார்கள். நபி ஈஸா (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை இது குறித்து பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கேள்விகளில் தேவையில்லாத சில அம்சங்களுக்கு விளக்கம் தருவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக கிறிஸ்தவர்களுக்குள் பல்வேறு பகுதிகளாப் பிரிந்துள்ளனர். இவைகளெல்லாம் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும் நன்றாக அறிவார்கள். இவைகளுக்கு இஸ்லாம் தரும் விளக்கமென்ன? சிக்கலும் குழப்பமும் நிறைந்த இந்தக் கேள்விகளுக்கு இஸ்லாத்தில் ஏதேனும் விளக்கமுண்டா? Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-1) (JESUS SON OF MARY)