மோசடி செய்யத் தடை.

1132. மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு ‘இது இன்னாருடைய மகன் இன்னோரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி 6177 இப்னு உமர் (ரலி).

1133. மோசடி செய்பவன். ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்சமிட்டு)க் (காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3188 இப்னு மஸ்ஊது (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , . Bookmark the permalink.