கலாலா சொத்து பற்றி….

1042. நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தில் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி 5651 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1043. நபி (ஸல்) அவர்களுக்கு இறுதியாக அருளப் பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் பாரஅத் எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப் பிரிவினை தொடர்பாக) இறுதியாக இறங்கிய வசனம் (நபியே) உங்களிடம் மக்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள் எனும் (இந்த 4 :176 ஆவது) வசனமாகும்.

புஹாரி :4605 அல் பராஉ (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.