வீண் பிடிவாதத்தினால் நெறிதவறிப்போனவர்கள் யூதர்கள். அறியாமையினால் நெறி தவறிப்போனவர்கள் கிறிஸ்தவர்கள்.

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப் பெயரால்!

1) எல்லாப் புகழும் அனைத்துலகையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே!

2) அவன் மாபெரும் கருணையாளன். தனிப் பெரும் கிருபையாளன்.

3) கூலி கொடுக்கும் நாளின் அதிபதி.

4) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

5) எங்களை நீ நேரான வழியில் செலுத்துவாயாக!

6) (அது) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி.

7) உனது கோபத்திற்கு ஆளாகாத மற்றும் நெறிகெட்டுப் போகாதவர்களின் வழி!

This entry was posted in இறுதி இறை வேதம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.