இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்

அல்லாஹ் தன் சிருஷ்டிகளில் விரும்பியவற்றைக் கொண்டு மனிதர்களிடம் சத்தியம் செய்கிறான். மனிதர்களைப் பொறுத்தவரை சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம் அனுமதிக்கப்படாதது போல அவற்றைக் கொண்டு இறைவனிடத்திலும் சத்தியம் செய்வதில் ஷிர்க் நுழைந்து விடுகிறது. அல்லாஹ் தன் சிருஷ்டிகளைப் பாராட்டி அவற்றின் கௌரவத்தையும், அமைப்பையும், அவற்றைப் படைத்தல் இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அதன் காரணத்தினால் தன் ஏகத்துவத்தை உறுதிப் படுத்துகிறான். இவையனைத்தையும் ஏகத்துவத்தின் அத்தாட்சிகள் என்று தெரிவிப்பதற்காகவும் அவற்றைக் கொண்டு இறைவன் சத்தியம் செய்கிறான்.
ஆனால் மனிதன் சிருஷ்டியைக் கொண்டு சத்தியம் செய்யும்போது தன் தேவைகள் நிறைவேறுவதை மட்டும் இலட்சியமாகக் கொள்கிறான். பிறர் தன் சொற்களை மெய்ப்பிப்பதற்காக வேண்டி, அல்லது சாதாரண ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்கிறான். இவ்விரு சத்தியங்களுக்கு மத்தியிலும் நீண்ட வேறுபாடுகள் உண்டு. எனவே தேவைகள் கிடைப்பதற்கு தன்னைப் படைத்த அல்லாஹ்விடம் அவனைக் கொண்டே கேட்பதுபோல படைப்பினங்களிடமும் அந்த அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்ய வேண்டும். ஒருவன் மற்றவனிடம் ‘இன்னதைக் கொண்டு சத்தியமாகக் கேட்கிறேன்’ என்று கூறினால் இக்கூற்று தவறாகும். இங்கே சத்தியம் செய்தவன் மீது (கஃப்பாரா) குற்றப்பரிகாரம் கடமையாகிறது. ஆனால் யார்மீது ஆணையிடப்பட்டதோ அவருக்கு குற்றமொன்றும் இல்லை என்று ‘அஇம்மத்துல் புகஹா’ என்னும் மார்க்க அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். ஒருவன் மற்றவனிடம் ‘இன்னாரைக் கொண்டு கேட்கிறேன்’ என்று கூறினால் இங்கு யார் மீதும் குற்றப்பரிகாரம் கடமையாகாது. இதிலிருந்து அல்லாஹ்விடத்தில் அவன் படைப்புகளைக் கொண்டு சத்தியம் செய்து கேட்டல் ஜாயிஸாகாது என்றும் தெளிவாகிறது.
சத்தியம் செய்யாமல் படைப்புகளின் பொருட்டால் இறைவனிடம் வேண்டுவதினுடைய சட்டங்கள் பற்றி முன்னரே கூறப்பட்டு விட்டது. ஒருவன் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக இன்னதை நான் செய்வேன்’ என்றால் இங்கேயும் யாரும் கஃப்பாரா (குற்றப்பரிகாரம்) கொடுக்க வேண்டாம். மேலும் ஒருவன் ‘இறைவன் மீது சத்தியமாக நீ இதைச் செய்ய வேண்டும்’ என்று கூறிவிட்டு சத்தியத்திற்கொப்ப சத்தியம் செய்யப்பட்டவன் செயல்படவில்லையானால் இங்கே சத்தியம் செய்பவன் மீது குற்றப்பரிகாரம் கடமையாகும். எவர் பிரார்த்தனையின் வாக்கியத்தைக் கொண்டு கேட்கிறாரோ அவர் பிரார்த்தித்தவனுக்கு ஒப்பாகிறார்.
ஆனால் கீழ்வருவதற்கொப்ப அல்லாஹ்வின் மீது ஒருவன் சத்தியம் செய்வானென்றால், உதாரணமாக ‘இரட்சகனே! நிச்சயமாக நீ இதை எனக்குச் செய்துதர வேண்டுமென்று உன்மீது சத்தியம் செய்கிறேன்’ இம்மாதிரியான சத்தியங்கள் அனுமதிக்கப்படும். இவை அல்லாஹ்வைக் கொண்டு அவன் மீது ஆணையிடுதல் என்னும் தன்மையிலுள்ள சத்தியமே தவிர சிருஷ்டிகளைக் கொண்டு அல்லாஹ்விடம் சத்தியம் செய்யும் தன்மையில் உள்ளதல்ல. ஸலஃபுஸ்ஸாலிஹீன்களைச் சார்ந்த பராஃ இப்னு மாலிக்கும், மற்றவர்களும் இப்படி அல்லாஹ்வைக் கொண்டு அவன் மீதே சத்தியம் செய்து பிரார்த்தித்து இருக்கிறார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ‘இரண்டு பழைய துணிகள் அணிந்து தலைமுடிகள் சிதறி தூசுகள் படிந்து வாசல்களில் சென்றால் துரத்தப்படுகின்ற எத்தனை எத்தனையோ மனிதர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டால் அவர்களுக்கு அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுப்பான்’ என்று ஒரு ஸஹீஹான ஹதீஸில் வருகிறது. மேலும் ஒரு ஹதீஸில் நபியவர்களை நோக்கி அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் ‘நாயகமே! உண்மையாக தங்களை நபியாக அனுப்பி வைத்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, அர்ருபைபுடைய முன்பல் உடைக்காமலிருக்கட்டும்’ என்று. இப்படிச் சத்தியம் செய்து வேண்டிக் கொண்டபோது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அனஸே, பழிக்குப்பழி வாங்குவது இறைவனின் விதியாக இருக்கிறதே’ என்று. இதைக் கேட்டதும் மனிதர் அர்ருபைபை மன்னித்து விட்டார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் அவன் மீது ஆணையிட்டால் அவன் அதற்கொப்ப நிறைவேற்றிக் கொடுப்பான்’ என்று கூறினார்கள். இவையனைத்தும் அல்லாஹ்விடத்தில் அவனைக் கொண்டு சத்தியம் செய்தலாகும். மாறாக படைப்புகளைக் கொண்டு அவனிடத்தில் சத்தியம் செய்வதல்ல.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.