Monthly Archives: October 2007
கருப்பையிலிருக்கும் கால்நடையை விற்கத் தடை.
968. ”நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ‘இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)’ என்று செய்யப்படும் (ஹபல் இல் ஹபாலா) வியாபாரமே இது!” புஹாரி :2143 இப்னு உமர் … Continue reading
முலாமஸா முனாபதா முறை விற்பனைக்குத் தடை.
965. ”நபி (ஸல்) அவர்கள் ‘முனாபதா, முலாமஸா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்!” புஹாரி: 2146 அபூஹூரைரா (ரலி). 966. ”ஈதுல் ஃபித்ரிலும் (நோன்புப் பெருநாளிலும்) ஈதுல் அல்ஹாவிலும் (ஹஜ்ஜுப் பெருநாளிலும்) நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன!”என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புஹாரி :1993 அபூஹூரைரா (ரலி). … Continue reading
அடிமையை விடுவித்தலின் சிறப்பு.
964. ”ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2517 அபூஹுரைரா (ரலி).
பெண்களுக்கான பயணச் சட்டம்!
கேள்வி எண்: 49. ‘(தங்களுடன்) வருவதற்குரிய அனுமதிக்கப்பட்ட ஆண் துணையின்றி எந்தப் பெண்ணும் 3 நாட்கள் தொலைவுள்ள இடங்களுக்குப் பயணம் செய்யக்கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். புகாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பெயர் என்ன?
அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவருக்கே உரிமை. (2)
961. (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப்பெற்றன: 1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார். 2. ‘அடிமையின் வாரிசுரிமை (‘வலா”) விடுதலை செய்தவருக்கே உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் … Continue reading
அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவருக்கே உரிமை.
960. பரீரா (ரலி) அவர்கள் (தம் எஜமானிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப்பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்குத் தமக்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். அவர் (தம் எஜமானுக்கு விடுதலைத் தொகையாக) ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு ஊக்கியாவாக தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது. ஆகவே நான் (அவரை விடுதலை செய்ய ஆசைப்பட்டு) நான் அவர்களுக்கு (உன் … Continue reading
ஓரு அடிமையைத் தன்னை விடுவித்துக் கொள்ளும் அளவு சம்பாதிக்க அனுமதித்தல்.
959. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனிறல், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி … Continue reading
என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்!
7:65. “‘ஆத்’ (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம்முடைய ரஸூலாக அனுப்பினோம்) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுத்துப்) பயப்பட வேண்டாமா?” என்று கூறினார்.
அடிமைகளை விடுவித்தல்.
958. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை … Continue reading
சாப அழைப்பு பிரமாணம்.
“஠ல௠லிà®à®©à¯” (மனà¯à®µà®¿à®¯à¯à®ªà¯ பிற ஠நà¯à®¨à®¿à®¯à®©à¯à®à®©à¯ à®à®à®²à¯à®±à®µà¯ à®à¯à®£à¯à®à®¤à®¾à® à®à¯à®±à¯à®±à®®à¯ à®à¯à®®à®¤à¯à®¤à®¿à®¯à®¤à®¾à®²à¯ à®à®£à®µà®©à¯à®®à¯ மனà¯à®µà®¿à®¯à¯à®®à¯ à®à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¿à®à¯à®¤à®²à¯) 952. à® à®à¯à®²à®¾à®©à¯ à®à¯à®²à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤ à®à®µà¯à®®à®¿à®°à¯ (ரலி) (தம௠à®à¯à®²à®¤à¯à®¤à®¿à®©à¯ தலà¯à®µà®°à®¾à®©) à®à®¸à®¿à®®à¯ à®à®ªà¯à®©à¯ ஠த௠஠லà¯à® னà¯à®à®¾à®°à®¿ (ரலி) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ வநà¯à®¤à¯, ‘à®à®¸à®¿à®®à¯ ஠வரà¯à®à®³à¯! தம௠மனà¯à®µà®¿à®¯à¯à®à®©à¯ மறà¯à®±à¯à®°à¯ ஠நà¯à®¨à®¿à®¯ à®à®à®µà®©à¯ (தà®à®¾à®¤ à®à®±à®µà¯ à®à¯à®£à¯à®à®ªà®à®¿) à®à®°à¯à®à¯à®à®à¯ à®à®£à¯à® … Continue reading