Monthly Archives: September 2007
மணமகன் வலீமா விருந்து கொடுத்தல்.
902. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ ஸà¯à®©à®ªà¯ (ரலி) ஠வரà¯à®à®³à¯ மணநà¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®ªà¯à®¤à¯ ஠ளிதà¯à®¤ (வலà¯à®®à®¾) மணவிரà¯à®¨à¯à®¤à®¤à¯à®ªà¯ பà¯à®©à¯à®±à¯ தம௠மனà¯à®µà®¿à®¯à®°à®¿à®²à¯ வà¯à®±à¯à®µà®°à¯ மணநà¯à®¤à®ªà¯à®¤à¯à®®à¯ ஠ளிà®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯; ஸà¯à®©à®ªà¯ (ரலி) ஠வரà¯à®à®³à¯ மணநà¯à®¤à®ªà¯à®¤à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ à®à®°à¯ à®à®à¯à®à¯ (à® à®±à¯à®¤à¯à®¤à¯) மணவிரà¯à®¨à¯à®¤à®³à®¿à®¤à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. பà¯à®¹à®¾à®°à®¿ :5168 ஠னஸ௠(ரலி). 903. à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ ‘ஸà¯à®©à®ªà¯ பினà¯à®¤à¯ à®à®¹à¯à®·à¯ … Continue reading
அடிமைப்பெண்ணை விடுதலை செய்து பின் மணமுடித்தல்.
900. ‘நபி (ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி (ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய … Continue reading
குர்ஆன் வசனங்கள் மஹ்ராக….
898. ஒரு பெண்மணி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்” என்று கூறினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் … Continue reading
அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மனிதனை காப்பாற்றும் வேறு தெய்வங்கள் ஏதேனும் உண்டா?
21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் குறை கூறுபவர் இவர்தானா?” என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை, மேலும் அவர்கள் ரஹ்மானுடைய (அருளாளனுடைய) நினைவை நிராகரிக்கின்றனர்.21:37. மனிதன் அவசரக்காரனகவே படைக்கப்பட்டிருக்கிறான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.21:38. … Continue reading
சிறுமியை அவளின் தந்தை திருமணம் செய்து வைத்தல்.
897. நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் வீட்டில் தங்கினோம். அங்கு எனக்கு நோய் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகி விட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் … Continue reading
திருமணத்துக்கு மணப்பெண் சம்மதம் பற்றி.
895. நபி (ஸல்) அவர்கள், ‘கன்னி கழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவள் மௌனம் சாதிப்பதே … Continue reading
மனைவியை ஆகுமானதாக்க…..
894. உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2721 உக்பா இப்னு ஆமிர் (ரலி).
மஹரைத் தவிர்க்க ஒருவர் தன்மகளை சகோதரியை அடுத்தவருக்கு மணமுடித்துவிட்டு அவரின் மகளை சகோதரியை மணப்பது (ஷிஃகார்) தடை.
893. ‘ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஒருவர் மற்றெவாருவரிடம் ‘நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ‘ஷிஃகார்’ எனப்படும். இதில் இரண்டு பெண்களுக்கும் ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது. … Continue reading
ஒருவர் மணம்பேசும் பெண்ணை மற்றவர் இடையில் புகுந்து தனக்காக கேட்டல்.
892. ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண் பேசலாகாது. தமக்கு முன் பெண் கேட்டவர் அதைக் கைவிடும்வரை அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை (இவர் பொறுத்திருக்க … Continue reading
மணமுடிக்கத் தடையான பெண்கள்.
890. (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5109 அபூஹுரைரா (ரலி).