Monthly Archives: July 2007
குழப்பமான காலத்தில் ஹஜ்ஜூக்கு இஹ்ராம் அணிந்தவர் பற்றி..
771. குழப்பமான காலத்தில் உம்ரா செய்வதற்காக இப்னு உமர் (ரலி) மக்காவிற்குப் புறப்பட்டபோது, ‘கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்களுடன் சென்றபோது நாங்கள் செய்தது போல் செய்து கொள்வோம்!” என்றார்கள். ஹுதைபிய்யா ஆண்டின்போது (ஹிஜ்ரி6-ல்), நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்த காரணத்தினால் இப்னு உமர் (ரலி) அவர்களும் உம்ராவிற்கு … Continue reading
கிரான் முறை ஹஜ் செய்பவர் பற்றி….
770. ”இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே! என்ன காரணம்?’ என நான் நபி (ஸல்) அவர்களைக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்து விட்டேன்; என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாளம் … Continue reading
தமத்துவ் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுத்தல் பற்றி..
768. இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். (மதீனாவாசிகளின் எல்லையான துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச் சென்று குர்பானியையும் கொடுத்தார்கள். முதலில் உம்ராவுக்காக தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் அணிந்தார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர்களாக … Continue reading
தமத்துவ் முறை ஹஜ் செய்ய அனுமதி.
767.’தமத்துவ்’ (ஹஜ் தொடர்பான இந்த 02:196 வது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. எனவே, நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்படவில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும்வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் … Continue reading
இஹ்ராமிலிருந்து எப்பொழுது விடுபடுவது?
766. நபி (ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருக்கும்போது நான் அங்கு வந்தேன். அப்போது அவர்கள், ‘ஹஜ் செய்ய நாடி விட்டீரா?’ எனக் கேட்க, நான் ‘ஆம்!” என்றேன். ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர்?’ என அவர்கள் கேட்டதும் ‘நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காக!” என்றேன். உடனே அவர்கள், ‘நல்லகாரியம் செய்தீர்! போய் இறையில்லம் … Continue reading
இறுதி தீர்ப்பு நாளை நம்பி தொழுகையை பேணுபவர்களே குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நம்புபவர்கள்!
6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா (மோஸே) கொண்டு வந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை … Continue reading
அரஃபாத்தில் தங்குதல் பற்றி….
764. மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாகத் வலம்வருவார். … Continue reading
ஹஜ்ஜில் இஹ்ராமை அணிதலும் களைதலும்….
755. ஹà®à¯à®à®¤à¯à®¤à¯à®²à¯ விதாவில௠நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®à¯ à®à¯à®©à¯à®±à®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà¯à®¤à¯ à®à®®à¯à®°à®¾à®µà®¿à®±à¯à®à®¾à® à®à®¹à¯à®°à®¾à®®à¯ (à®à®à¯à®¯à¯) ஠ணிநà¯à®¤à¯à®®à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯, ‘யாரà¯à®à®©à¯ à®à¯à®°à¯à®ªà®¾à®©à®¿à®ªà¯ பிராணி à®à®³à¯à®³à®¤à¯ ஠வர௠à®à®®à¯à®°à®¾à®µà¯à®à¯ ஹà®à¯à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®¹à¯à®°à®¾à®®à¯ ஠ணிநà¯à®¤à¯ à®à¯à®³à¯à®³à®à¯à®à¯à®®à¯. à®à®©à¯à®©à¯à®®à¯ ஠வர௠à®à®µà¯à®µà®¿à®°à®£à¯à®à¯à®¯à¯à®®à¯ நிறà¯à®µà¯à®±à¯à®±à¯à®®à¯ வர௠à®à®¹à¯à®°à®¾à®®à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ விà®à¯à®ªà®à®à¯ à®à¯à®à®¾à®¤à¯” à®à®©à¯à®±à®¾à®°à¯à®à®³à¯. à®à®©à®¾à®²à¯ நான௠மà®à¯à®à®¾ வநà¯à®¤à®ªà¯à®¤à¯ மாதவிà®à®¾à®¯à¯à®à¯à®à®¾à®°à®¿à®¯à®¾à®©à¯à®©à¯. à®à®¤à®©à®¾à®²à¯ … Continue reading
நிபந்தனையுடன் இஹ்ராமணிதல்.
754. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்! என்றார்கள். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக ‘இஹ்ராம்’ … Continue reading
இஹ்ராமணிந்தவர் மரணித்தால்….
753. (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம்; அவரின் தலையை … Continue reading