Monthly Archives: May 2007

உலக ஆசைகள் தீமை பயக்கும்.

625. (ஒருநாள்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) ‘இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத் தான் உங்களின் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்” என்றார்கள். ‘பூமியின் வளங்கள் எவை?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ‘(கனிமப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய இவ்வுலகக் கவர்ச்சிப் பொருள்கள் (தாம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on உலக ஆசைகள் தீமை பயக்கும்.

ளஈபான, மௌளூஆன ஹதீஸ்கள்

நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களில் ஸஹீஹ் (சரியானது) ஹஸன் (நல்லது) ளஈப் (பலவீனமானது) மௌளூஃ (கற்பனை செய்யப்பட்டது) என்று பல வகையுண்டு. இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் முன்னுரையில் ‘ளஈப்’களைப் பற்றிய எச்சரிக்கையைப் பின்வருமாறு தலையங்கமிட்டுக் கூறுகிறார்கள். ‘பாபுந்-நஹ்யி அனில் ஹதீஸி பி-குல்லி மா-ஸமிஅ’ (செவியேற்பதெல்லாவற்றைக் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ளஈபான, மௌளூஆன ஹதீஸ்கள்

போதும் என்ற மனமே திருப்தி.

624. (வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 6446 அபூஹுரைரா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on போதும் என்ற மனமே திருப்தி.

ஆதமின் மகனின் பேராசை.

622.ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஆதமின் மகனின் பேராசை.

உலக ஆசைகளை வெறுப்பது….

620.முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6420 அபூஹுரைரா (ரலி) 621.மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on உலக ஆசைகளை வெறுப்பது….

ஆதார நூல்களில் உள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கையை கூறுக!

கேள்வி எண்: 36. புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களில் உள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கையைக் கூறுக. பதில்: புகாரி – 7275. முஸ்லிம் – 7425. திர்மிதி – 1600. அபூதாவூத் – 4800.

Posted in கேள்வி பதில் | Comments Off on ஆதார நூல்களில் உள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கையை கூறுக!

யாசிக்காமல் கிட்டியதைப் பெறுதல்.

619.நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on யாசிக்காமல் கிட்டியதைப் பெறுதல்.

யாசகம் தவிர்.

615. ‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது’ … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on யாசகம் தவிர்.

உயர்ந்த கரம் தாழ்ந்த கரத்தைவிடச் சிறந்தது.

612.நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது” என்றும் கூறினார்கள். புஹாரி : 1429 இப்னு உமர் (ரலி). 613.”உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on உயர்ந்த கரம் தாழ்ந்த கரத்தைவிடச் சிறந்தது.

நரகத்தில் நுழைவதற்கு தங்கள் பாவத்தால் முதல் தகுதியுடைய நிராகரிப்போர்!

19:66. மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று. 19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா? 19:68. ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நரகத்தில் நுழைவதற்கு தங்கள் பாவத்தால் முதல் தகுதியுடைய நிராகரிப்போர்!