Monthly Archives: June 2006
திருடுதல்
அல்லாஹ் கூறுகிறான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்” (5:38) திருட்டுக் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம் பழமையான அல்லாஹ்வின் ஆலயத்தை ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களிடம் திருடுவதாகும். இத்தகைய திருடர்கள் … Continue reading
முரண்படும் விஷயம்!
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். 22:66. இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; … Continue reading
தௌஹீதுடைய பயன்களிற் சில……..
ஒரு தனி மனிதனிடத்திலோ, அல்லது ஒரு ஜமாஅத்திடத்திலோ ‘தௌஹீத்’ உறுதிப் படுத்தப்பட்டு விட்டால், அப்பொழுது மிகச் சிறந்த சில கனிவர்க்கங்கள் அவர்களுக்குக் கிடைப்பது நிச்சயமாகி விடும். அவற்றில் சில…… 1. மனிதன், அல்லாஹ் அல்லாதவர்களுக்கும், தாமே படைக்கப் பட்டிருக்கையில் எதனையும் படைக்கச் சக்தியற்ற படைப்புகளுக்கும் வணக்கம் செலுத்துவதிலிருந்தும், அவர்களுக்கு பணிந்து நடப்பதிலிருந்தும் அவனை விடுவிப்பதாகும். இது … Continue reading
மூன்று அடிப்படை விஷயங்கள் – 2
ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம் என்னவென்று உன்னிடம் கேட்கப்பட்டால், நீ சொல், ஒருவன் தன் இறைவனையும், அவன் மார்க்கத்தையும், அவனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் பற்றி அறிவதாகும். முதலாவது அடிப்படை விஷயம் அல்லாஹ்வை அறிவதாகும். உன்னுடைய இறைவன் யார்? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் நீ சொல், என்னையும் உலகத்திலுள்ள அனைவர்களையும் தனது … Continue reading
பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே!
39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. 39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு … Continue reading
சூதாட்டம்
அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலி பீடங்கள், குறி பார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்” (5:90) அறியாமைக் காலத்து மக்களிடம் சூதாட்டம் பல விதங்களில் இருந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த பிரபலமான ஒரு விதம் வருமாறு: ஒரு ஒட்டகத்தில் பத்து … Continue reading
முடிவேயில்லாத புகழுக்குரியவன்!
18:109. சமுத்திரத்திலுள்ள நீர் யாவும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை (எழுத) ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தச் சமுத்திரம் யாவும் செலவாகி விடும். அதைப்போல் இன்னொரு பங்கும் (சமுத்திரத்தைச்) சேர்த்துக்கொண்ட போதிலும் கூட என்று (நபியே!) நீர் கூறும். 31:27. மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், … Continue reading
தௌஹீதுடைய சிறப்புகளிற் சில…..
“எவர்கள் விசுவாசம் கொண்டு, தங்கள் விசுவாசத்துடன் யாதொரு அக்கிரமத்தை (ஷிர்க்கை)யும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு; அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்” (6:82) மேற்கண்ட வசனம் அருளப்பட்ட போது ஸஹாபாக்களின் நிலைபற்றி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். ‘ஸஹாபாக்கள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் ரஸூலே! எங்களில் எவர்தான் அநியாயம் செய்யாதவர்கள் … Continue reading
ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்
அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (62:9) சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் … Continue reading
தௌஹீதின் முக்கியத்துவம்
அல்லாஹ் உலகோர்களைத் தனக்கு வழிபடுவதற்காவே படைத்துள்ளான். அல்குர்ஆன் தனது அதிகமான அத்தியாயங்களில் ஏகத்துவக் கொள்கையையே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் ஷிர்க்குடைய தீய விளைவுகளைப் பற்றி வலியுறுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றது. இது, இம்மையில் அழிவுக்கும், மறுமையில் நிரந்தர நரக வாழ்க்கைக்கும் காரணமாய் அமைகின்றது. ரஸுல்மார்கள் அனைவரும் தமக்கு அல்லாஹ் கட்டளையிட்டபடி, தௌஹீதைக் கொண்டே பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். … Continue reading