Monthly Archives: May 2006
நஜஷ் – வியாபாரத்தில் வஞ்சித்தல்
நஜஷ் என்பது பொருளை வாங்காத ஒருவர் (இவர் வியாபாரியால் நிறுத்தப் பட்டிருப்பார்) அதன் விலையை அதிகப் படுத்துவதாகும். பிறரை ஏமாற்றுவதும் படிப்படியாக அவரை அதிக விலைக்குக் கொண்டு செல்வதும் தான் இதன் நோக்கமாக இருக்கும். ‘நீங்கள் வஞ்சக வியாபாரம் செய்யாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி. … Continue reading
இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ் உன்மீது அருள்புரிவானாக! நான்கு விஷயங்களை அறிவது நம்மீது கடமையாகும் என்பதை நீ அறிந்து கொள். ஒன்றாவது: அறிவு, அதாவது அல்லாஹ்வையும், அவன் நபியையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆதாரபூர்வமாக அறியத்தேவையான அறிவு. இரண்டாவது: அந்த அறிவின்படி அமல் செய்வது. மூன்றாவது: அதன்பால் மக்களை அழைப்பது. நான்காவது: இவ்வாறு அழைப்புக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற இன்னல்கள் … Continue reading
“அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா”
(ரஹ்மான் அர்ஷில் அமைந்து விட்டான்) இஸ்தவா என்ற சொல்லுக்கு ‘அல்உலுவ்வு’ என்னும் அல்லாஹ்வுக்குரிய உயர்வை உறுதிப்படுத்தக் கூடியதாக குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஸலபு(முன்னோர்)களின் கூற்றுகள் ஆதாரமாய் அமைந்துள்ளன. பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் அல்லாஹ் உயர்வான இடத்தில் அமைந்துள்ளான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. “கலிமாதையிப், ஸலவாத்து போன்ற தூய வாக்கியங்கள் அவனளவில் உயர்கின்றன. நல்ல செயல்களை அவனே உயர்த்துகின்றான்” … Continue reading
நஷ்டவாளிகள்
103:1,2,3. காலத்தின் மீது ஆணையாக மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டத்தி(ன் வழியி)லிருக்கின்றான். ஆயினும், எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும், நன்மைகளை செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, இவர்களைத் தவிர (மற்றவர்கள் நஷ்டவாளிகளாவார்கள்) அல் … Continue reading
விற்பனைப் பொருளின் குறைகளை மறைத்தல்
‘ஒரு உணவுக் குவியலின் பக்கம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அதில் அவர்கள் தம் கையை நுழைத்தபோது அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. உணவு வியாபாரியே! என்ன இது? என்று வினவினார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் பட்டு விட்டது என்று பதிலளித்தார். மக்கள் பார்க்கும் விதமாக உணவுப் பொருளின் மேற்பகுதியில் … Continue reading
இஸ்தஇன் பில்லாஹி வஹ்தஹூ
(அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோருவீராக) 1. ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே கேள்! உதவி கோரினால் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோரு!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்) இமாம் நவவி (ரஹ்) அவர்களும், இப்னுஹஜர் ஹைதமி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘இவ்வுலக தேவையாயினும் மறு … Continue reading
நிராகரிப்பின் கூலி!
35:15. மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். 35:16. அவன் நாடினால், உங்களைப் போக்கி விட்டு, (வேறொரு) புதிய படைப்பைக் கொண்டு வருவான். 35:17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல. 35:18. (மறுமை – நாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; … Continue reading
வட்டி வாங்குதல்
திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள்” (2:278,279) … Continue reading
‘இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்’
(வழிபடுவதும் கொண்டும், பிரார்த்தனை புரிவது கொண்டும், உதவி தேடுவது கொண்டும் உன்னை மட்டுமே சொந்தமாக்குகின்றோம்.) 1. முஸ்லிம்கள் இந்த வசனத்தை ஒரு நாளைக்குப் பல விடுத்தங்கள் தொழுகையினுள்ளும் வெளியிலும் ஓதி வருகின்றனர். இதுதான் ஸூரத்துல் பாத்திஹாவின் சாரமாகும். ஸூரா பாத்திஹா குர்ஆனின் சாரமாகும். 2. இவ்வசனம், தொழுகை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடல் போன்ற அனைத்து வணக்கங்களையும் … Continue reading
கற்பனையில் மூழ்கிக் கிடக்கும் பெரும்பான்மை!
6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். 6:117. நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் – அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் … Continue reading